இரண்டு மாதங்களில் மருத்துவப் படிப்பு நிறைவுற உள்ள நிலையில் போரின் காரணமாக உக்ரைனிலிருந்து வேதாரண்யம் வந்த மருத்துவ மாணவர்.
வேதாரணியம்
மார்ச் 09
கடந்த 2016 ம் ஆண்டு உக்ரைனில் உள்ள யுவானோ ப்ரான்கிவிஸ்க் நகரில் உள்ள யுவானோ ப்ரான்கிவிஸ்க் தேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தில் படிப்பில் சேர்ந்து , மே மாதத்துடன் படிப்பு முடிவுறும் தருவாயில் ரஷ்ய – உக்ரைன் போர் காரணமாக ஊர் திரும்பியுள்ளார் வேதாரண்யத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் செந்தில்நாதன். 2000 மாணவர்கள் பயிலும் மருத்துவ பல்கலைக் கழகம் அருகே ரஷ்யாவின் குண்டு மழை பொழிய நீங்கள் தப்பித்துச் செல்லுங்கள் என பல்கலைக்கழகம் கைவிரிக்க , பேருந்தில் பயணித்து, உக்ரைன் எல்லையில் இரவில் 3 கிலோ மீட்டர் நடந்து ஸ்லோவோக்கியா நாட்டை அடைந்ததாகவும், அங்கிருந்த இந்திய தூதரகம் மாணவர்களுக்கு நட்சத்திர விடுதிகளில் தங்க வைத்து இந்திய அரசின் சார்பில் கட்டணம் பெறாமல் டெல்லிக்கு விமானம் மூலம் அனுப்பி பிறகு சென்னைக்கு விமானம் மூலம் வந்து ஊர் வந்து சேர்ந்ததாகவும் கூறுகிறார் செந்தில்நாதன்.
இன்னும் 2 மாதங்களில் மருத்துவப் படிப்பு நிறைவுற உள்ள நிலையில் போரின் காரணமாக தாயகம் வந்துவிட்டோம். சொந்த ஊர் வர காரணமான மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம் என்ற செந்தில்நாதன், தங்களின் சான்றிதழ்கள் பல்கலைக்கழகத்தில் உள்ளது. மருத்துவ சான்றிதழ்கள் கிடைக்கவும் , தமிழகத்தில் மருத்துவப் பணி கிடைக்கவும் மத்திய , மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

