இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் புலே நினைவு நாள்- நாகை பள்ளியில் நடந்த போட்டிகள்.
நாகப்பட்டினம்
மார்ச் 10
சமூக சீர்திருத்தவாதியும் கவிஞருமான சாவித்திரிபாய் புலே 1831ஜனவரி 3 ஆம் தேதி பிறந்தார். அவர் 1897 மார்ச் மாதம் 10ம் நாள் காலமானார். அவருடைய கணவர் மகாத்மா ஜோதிராவ் புலே .
சாவித்திரிபாய் புலேயின் நினைவு நாள் மார்ச் 10 ம் தேதி ஆகும். சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் பெண் கல்விக்காக முதல் பெண் ஆசிரியராக உருவெடுத்தவர் சாவித்திரி பாய் புலே.


அவரது நினைவாக இன்று நாகை மாவட்டம் ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப்பள்ளியில் பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி நடைபெற்றது.
மாணவ மாணவிகள் பங்கெடுத்துக் கொண்டு சாவித்திரிபாய் புலேயின் கல்விச் சேவை பற்றி பேசினர். சாவித்ரிபாய் புலேயின் உருவத்தை வரைந்தனர்.
பங்கெடுத்துக் கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் தலைமை ஆசிரியர் சிவா மற்றும் பட்டதாரி ஆசிரியர் பாலசண்முகம் பரிசுகளை வழங்கினர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

