புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வலையப்பட்டி கிராமத்தில் கிராம காவல் கண்காணிப்பு அலுவலராக முதல்நிலை பெண்காவலர் திருமதி. சித்ராதேவியை மத்திய மண்டல ஐ.ஜி ஜெய்ராம் அறிமுகப்படுத்தினார் இந்நிகழ்ச்சியில் திருச்சி சரக டி.ஐ.ஜிஆனி விஜயா மற்றும் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கீதா பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலகண்ணன் பொன்னமராவதி காவல் ஆய்வாளர் கருணாகரன், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
