மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வேதாரண்யம் மார்ச் 7
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 124 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
பின்னர் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் வட்டம் வேளாங்கண்ணி சரகம் கருங்கண்ணி கிராமத்தைச் சேர்ந்த சத்யா என்பவருக்கு சுயதொழில் செய்வதற்காக மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து ரூ.7,000 மதிப்பீட்டில் தையல் இயந்திரத்தினையும், கீழ்வேளுர் வட்டம் காமேஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் என்பவருக்கு மாற்றுத் திறனாளி நலத்துறை சார்பில் ரூ.78,850 மதிப்பீட்டில் பெட்ரோல் ஸ்கூட்டரையும் வழங்கினார்.


அதனைத் தொடர்ந்து இன்று அளிக்கப்பட்ட மனுவிற்கு உடனடி தீர்வாக மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் செம்பியன்மகாதேவி கிராமத்தில் வசிக்கும் ரெத்தினம் என்பவருக்கு ரூ.3,000 மதிப்பீட்டில் காதுக்கு பின் அணியும் காதொலிகருவி, அகலன்கண் ஊராட்சியைச் சேர்ந்த வில்சன் என்பவருக்கு ரூ.7,500 மதிப்பீட்டில் இருசக்கர நாற்காலி ஆகியவைகளையும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, சமூக பாதுகாப்பு துணைஆட்சியர் ராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முகஉதவியாளர் (பொது) ராமன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்,
நாகப்பட்டினம்.

