மழை காரணமாக நாகை மாவட்டத்தில் 5வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.உப்பு உற்பத்தி தொழிலும் முடங்கியுள்ளது .
வேதாரணியம்
மார்ச் 07
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாகை மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்தும் நேற்று நள்ளிரவு காற்று பலமாக வீசியதாலும் கடல் சீற்றமாக காணப்பட்டது. கடந்த 3ம் தேதி முதல் மீன்துறை அறிவுறுத்தலின்படி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக 5வது நாளாக நாகப்பட்டினம், செருதூர் ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம் ,கோடிக்கரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளியில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உணவு உப்பும் , இரசாயன உப்பும் உற்பத்தி செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் 2 தினங்களாக அவ்வப்போது பெய்த மழை காரணமாக இந்த உப்பு பாத்திகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளதால் உப்பு உற்பத்தி செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.


மீன்பிடிக்க செல்லாததாலும் , உப்பு உற்பத்தி செய்ய இயலாததாலும் மீனவர்களும் , உப்பு உற்பத்தி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாள.

