ஆறுகாட்டுத்துறையிலிருந்து நாகப்பட்டினத்திற்கு அரசு பேருந்து தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கௌதமன் தொடங்கி வைத்தார்.
வேதாரணியம்
மார்ச் 06
நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட ஆறுகாட்டுத்துறை பகுதியிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் முன்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால் தற்போது தனியார் மினி பஸ்கள் மட்டுமே இயங்கி வருகிறது. கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன் வாக்கு சேகரிக்க வந்த தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதனிடம் ஆறுகாட்டுத்துறை யிலிருந்து பேருந்து இயக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மனு கொடுத்தனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் ஆறுகாட்டுத்துறையிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும் என உறுதியளித்தார். அதன்படி இன்று ஆறுகாட்டுத்துறையிலிருந்து நாகப்பட்டினத்திற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் (விரைவு) பேருந்து தொடங்கி வைக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் என். கௌதமன் விரைவு பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆறுகாட்டுத்துறை யிலிருந்து காலை 8 .45 , மதியம் 12 .45 , மாலை 4.45 என மூன்று முறை ஆறுகாட்டுத்துறையிலிருந்து வேதாரண்யம் வழியாக நாகப்பட்டினத்திற்கு செல்லும்.


தொடக்க விழாவில் நாகப்பட்டினம் நகராட்சி தலைவர் மாரிமுத்து, வேதாரணியம் நகராட்சித் தலைவர் மா.மீ. புகழேந்தி ,அரசுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளர் மகேந்திர குமார், கிளை மேலாளர் சுரேஷ்குமார், தொழிற்சங்க நிர்வாகிகள் ஹரிகிருஷ்ணமூர்த்தி, நெடுஞ்செழியன், கனகராஜ் மற்றும் இமையா முருகையன், இளவரசி நாகராஜன், திருக்குமரன் உள்ளிட்ட வேதாரணியம் நகராட்சி உறுப்பினர்களும் கிராம பஞ்சாத்தார் மற்றும் கிராம மக்களும் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

