நாகூரில் அடுக்குமாடி குடியிருப்பில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் சம்பாத் தோட்டத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் பங்களிப்புடன் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளஅடுக்குமாடிகுடியிருப்பில் அடிப்படைவசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் இன்று 05.03.2022 நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். உரிய அலுவலர்களிடம் தேவையான வசதிகள் அனைத்தையும் உடனடியாக நிறைவேற்றிடுமாறு அறிவுறுத்தினார். பின்னர் இத்திட்டத்தில் சொந்த இடமில்லாதோர் பங்களிப்புடன் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஒரு குடியிருப்புக்கு இந்திய அரசால் 1.50 இலட்சம் மானியமும், தமிழ்நாடு அரசால் ரூ7.00 இலட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. நகர்புறங்களின் ஆட்சேபகரமான நிலங்களில் வாழும் குடியிருப்பு வாசிகள் இத்திட்டத்தின் கீழ் தகுதியுடையவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

பின்னர், நாகப்பட்டினம் மாவட்டம் பப்ளிக் ஆபிஸ் ரோடு காடம்பாடியில் உள்ள பொதுப்பணியாளர்கள் கூட்டுறவு பண்டகசாலை, காடம்பாடியில் உள்ள நியாய விலைக் கடையில் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது உதவி நிர்வாக பொறியாளர் இராஜதுரை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால், வட்டாட்சியர் ஜெயபால் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் உள்ளார்கள்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளா்,
வேதாரண்யம்

