தூத்துக்குடிக்கு தமிழக முதல்வர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ஆய்வு செய்தார்
வருகிற 06.03.2022 மற்றும் 07.03.2022 ஆகிய 2 நாட்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வருகை தந்து கலைஞர் அரங்கத்தில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவச் சிலையை திறந்து வைக்கிறார், அதன்பின், ஸ்பிக் வளாகத்தில் சூரியஒளி மின்சக்தி உபகரணங்களை திறந்து வைத்தல் மற்றும் சிப்காட் வளாகத்தில் புதிய சர்வதேச அறைகலன் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
அதன்படி முதல்வரின் பயணத்திட்டத்தில் இடம் பெற்றுள்ள பகுதிகளை இன்று (04.03.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.


இந்த ஆய்வின்போது தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் மயிலேறும்பெருமாள், தூத்துக்குடி நகர உட்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஞானராஜன், தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துகணேஷ் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.

