மோசடி செய்யப்பட்ட 35 லட்சம் கைப்பற்றப்பட்டது
நெல்லை மாநகரில் திருட்டு போன 123 செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் போலீஸ் மாநகர காவல் ஆணையாளர் வழங்கினார்
நெல்லை மாநகராட்சி பகுதியில் ஏராளமான செல்போன்கள் திருட்டு போனதாக புகார் வந்தது
233 செல்போன்கள் மீட்பு
மேலும் செல்போன்கள் மூலம் பலர் மோசடியில் ஈடுபட்டு வங்கி கணக்கிலிருந்து பணத்தை திருடிய தாகவும் புகார் எழுந்தது இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையாளர் துரைகுமார் உத்தரவிட்டுள்ளார்

இதைத்தொடர்ந்து காவல்துறையினர் பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி காணாமல்போன 233 செல்போன்களை மீட்டனர் இதன் மதிப்பு வாய் 33 லட்சத்து 5500 ஆகும்
35 லட்சம் கைப்பற்றல்
மேலும் செல்போன்கள் மூலம் 6 பேரின் வங்கிக் கணக்கிலிருந்து மோசடி செய்யப்பட்ட ரூபாய் 26 லட்சத்து 73 ஆயிரத்தை குற்றவாளிகளின் வங்கிக் கணக்கில் இருந்து மீட்டனர்
இதேபோல் 23 பேரின் வங்கிக் கணக்கில் இருந்து திருடப்பட்ட 8 லட்சத்து 70 ஆயிரத்து 252-ஜ குற்றவாளிகளின் வங்கி கணக்கில் முடக்கி வைத்தனர்
உரியவர்களிடம் ஒப்படைப்பு
இந்த நிலையில் மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது காவல் ஆணையாளர் துறை குமார் கலந்துகொண்டு உரியவர்களிடம் 233 செல்போன்களையும் பணமோசடி பாதிக்கப்பட்ட 6 ஆறு பேரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட 26 லட்சத்து 73 ஆயிரத்து கான ஆவணத்தையும் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாநகர காவல் துணை ஆணையாளர் கிழக்கு சுரேஷ்குமார் மேற்கு மண்டல துணை ஆணையாளர் சுரேஷ்குமார் கூடுதல் காவல் ஆணையாளர் சங்கர் நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையாளர் நாக சங்கர் மற்றும் ஆய்வாளர்கள் காவலர்கள் கலந்து கொண்டனர்.

