நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் -தலைஞாயிறு பேரூராட்சியில் உறுப்பினர்கள் பதவி ஏற்பு.
வேதாரணியம்
மார்ச் 02
தமிழகம் முழுவதும் கடந்த 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவிற்கு உட்பட்ட தலைஞாயிறு பேரூராட்சியில் 15-வார்டு களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுகவை சேர்ந்த எட்டு வேட்பாளர்களும் , திமுகவைச் சேர்ந்த ஏழு வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர் .இன்று காலை தலைஞாயிறு பேரூராட்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவிற்கு அதிமுகவினரும், திமுகவினரும் வெவ்வேறு நேரங்களில் பதவியேற்க வருகை தந்தனர். புதிய உறுப்பினர்களுக்கு தலைஞாயிறு பேரூராட்சி செயல் அலுவலர் குகன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில் அதிமுகவை சேர்ந்த 8 உறுப்பினர்களும் , திமுகவை சேர்ந்த 7 உறுப்பினர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். ஒரு உறுப்பினர் கூடுதலாக பெற்ற அதிமுகவினர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளனர் .

இவ்விழாவில் வேதாரண்யம் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டார். காவல் துணை கண்காணிப்பாளர் முருகவேல் , பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் கீதா மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பேரூராட்சி தலைவருக்கான மறைமுகத் தேர்தல் நாளை மறுநாள் 4ம் தேதி காலை 9.30 மணிக்கும், துணைத்தலைவர் பதவிக்கு அன்று மாலையும் மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

