நாகை மாவட்டத்திற்கு புதிதாக இரண்டு 108 ஆம்புலன்ஸ் வழங்கல்
வேதாரண்யம் பிப் 27
நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகத்தில் 2 புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை மக்கள் பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சியர் டாக்டா் அருண்தம்புராஜ் கொடியசைத்து இன்று (27.02.2022) தொடங்கி வைத்தார். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) தலைவர் மதிவாணன் முன்னிலை வகித்தார்.
தமிழக முதல்வர் அவர்களால் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக தமிழகம் முழுவதும்; 188 புதிய 108 ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைக்கப்பட்டது
அதனைத் தொடந்து நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகத்தில் 2 புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை மக்கள் பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அருண் தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த இரண்டு ஆம்புலன்ஸ்களும் வேதாரண்யம் தாலுகாவில் உள்ள நாலுவேதபதி மற்றும் கருப்பம்புலம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் பயன்பாட்டிற்காக அனுப்பப்பட்டது. இந்த இரண்டு புதிய வாகனங்களை சேர்த்து மாவட்டத்திற்கு மொத்தம் 18 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் மக்களின் அவசர தேவைக்காக இந்த ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் 108 என்ற எண்ணை தொடர்பு கொண்டு கட்டணமில்லா இலவச தொலைபேசி மூலம் இச்சேவையை பொதுமக்கள் பெற்று பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை துணை இயக்குநர் டாக்டர் விஜயகுமார், 108 ஆம்புலன்ஸ் கோட்டமேலாளர் மோகன், 108 ஆம்புலன்ஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாரதிராஜா, அவசர ஊர்தி மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் உடனிருந்தனர்.

செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
.நாகை மாவட்ட செய்தியாளர்
வேதாரண்யம்.

