இலவச கண் சிகிச்சை முகாம்
வேதாரண்யம் பிப் 27,
நாகப்பட்டினம் போர்ட் டவுன் லயன்ஸ் சங்கம், நாகை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் பாண்டிசேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமினை நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடத்தினர்.
முகாமினை சர் ஜசக் நியூட்டன் கல்வி குழும தாளாளர் ரொட்டேரியன் டாக்டர் ஆனந்த் தொடங்கி வைத்து பேசினார். லயன்ஸ் கிளப் தலைவர் மனோகரன் வரவேற்றார்.
முகாமில் 547 நபர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கண் அறுவை சிகிச்சை செய்ய தகுதி பெற்ற 141 நபர்கள் பாண்டிசேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.

முகாமில் லயன்ஸ் கிளப் மண்டலத் தலைவர் செய்யதுபகுருதீன், வட்டாரத் தலைவர் எல்விஸ் லாய் மச்சோடா, நாகை போர்ட் டவுன் சங்க சாசனத் தலைவர் அண்ணாமல, தலைவர் G.மனோகரன், செயலர் G.ஆனந்த், பொருளர் பர்கான், ஒருங்கிணைப்பாளர் பரமசிவம், தமிழ்செல்வம், தேவராஜ் உட்பட சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
.நாகை மாவட்ட செய்தியாளர்
வேதாரண்யம்.

