தூத்துக்குடி மாவட்டத்தில் பணியின் போது வீர மரணமடைந்த ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு அவர்களுக்கு இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் தலைமையில் மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஏரல் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர் பாலு நேற்று கொலை செய்யப்பட்டார்.
அவருக்கு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுஎஸ்.ஜெயக்குமார் தலைமையில் காவல்துறையினர் மற்றும் காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் அனைவரும் அவரது ஆத்மா சாந்தியடைய 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தி அவருடைய புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உரையாற்றிய போது உதவி ஆய்வாளர் பாலு அவர்களின் இழப்பு, அவரது குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் காவல்துறைக்கும் ஒரு ஈடுகட்ட முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார் அனைவருக்கும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக ஆழ்ந்த இரங்கலை சமர்ப்பிக்கிறோம் என்று கூறினார்.
இந்த அஞ்சலியில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செல்வன், தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, தூத்துக்குடி ஆயுதப்படை காவல் ஆய்வாளர் ஜாகீர் உசேன், காவல் கட்டுபாட்டு அறை காவல் ஆய்வாளர் ஏழுமலை, நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தேவி, காவல்துறை அமைச்சுப்பணி நிர்வாக அதிகாரிகள் சுப்பையா, சிவஞானமூர்த்தி, சங்கரன், கண்காணிப்பாளர்கள் கணேசபெருமாள், மயில்குமார், மாரியப்பன், மாரிமுத்து, அருணாசலம், ராபர்ட், நம்பிராஜன் உட்பட உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், மாவட்ட குற்ற பிரிவு உதவி ஆய்வாளர் ஊர்காவல் பெருமாள், ஆயுதப்படை உதவி ஆய்வாளர்கள் மணிகண்டன், கிருஷ்ணமூர்த்தி உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

