சுதந்திரப் போராட்ட வீரர் சர்தார் வேதரத்தினம் பிள்ளையின் 125 வது பிறந்தநாள் விழா.
வேதாரணியம்
பிப் 25
சுதந்திரப் போராட்டத்தில் பெரும் பங்காற்றியவர் வேதாரண்யம் சர்தார் வேதரத்தினம் பிள்ளை. 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் மூதறிஞர் ராஜாஜி தலைமையில் சர்தார் வேதரத்தினம் பிள்ளையும் பங்கேற்றார். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்தது உப்பு சத்தியாகிரக போராட்டம். இதற்கு முன்னோடியாக திகழ்ந்தவர் சர்தார் வேதரத்தினம் பிள்ளை.சர்தார் வேதரத்தினம் பிள்ளையின் 125 வது பிறந்தநாள் விழா இன்று வேதாரண்யம் , சர்தார் வேதரத்தினம் பிள்ளையால் துவங்கப்பட்ட கஸ்தூரிபாய் காந்தி கன்யா குருகுலம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது . கலங்கரை விளக்க ஓய்வுபெற்ற அலுவலர் ஆர். குழந்தைவேலு தலைமையில்நடைபெற்றது .இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முனைவர் கு.ப இளம்பாரதி சர்தார் வேதரத்தினம் பிள்ளையின் தியாகச் செயலை பற்றி விரிவாக பேசினார். இவ்விழாவில் சர்தார் வேதரத்தினம் பிள்ளையின் பேரன்கள் கயிலை மணி அ.வேதரத்தினம், அ.கேடிலியப்பன் மற்றும் பள்ளி ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

