• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

பத்திரிகையாளர்கள் வாழ்வில் ஒளியேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல வாரியம் மற்றும் நலவாரிய குழு அமைத்த தமிழக அரசிற்கு பத்திரிகையாளர்கள் புகழாரம்

policeseithitv by policeseithitv
February 24, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
ரூ.6 ஆயிரம் கோடி அளவிற்கான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பத்திரிகையாளர்கள் வாழ்வில் ஒளியேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நல வாரியம் மற்றும் நலவாரிய குழு அமைத்த

தமிழக அரசிற்கு பத்திரிகையாளர்கள் புகழாரம்

சென்னை.பிப்.25
தமிழகத்தில் பத்திரிகையாளர்களின் நலன் கருதி நலவாரிய உதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் சட்டமன்றத்தில் செய்தித் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சுவாமிநாதன் அறிவிப்பினை வெளியிட்டார். இதை தொடர்ந்து கடந்த 23.02.2022 அன்று அரசாணை (நிலை) எண் 18ன் படி ஆணை பிறப்பித்து நலவாரிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் பத்திரிகையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டத்தை எண்ணி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதனுக்கும், நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து வருகின்றனர்.
நலவாரியம் அமைப்பதற்கு உறுதுணையாக இருந்து துறை ரீதியாக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்ட செய்தி துறையின் செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் வி.ப.ஜெயசீலன், கூடுதல் இயக்குனர் அம்பலவாணன் மற்றும் துறை அலுவலர்கள் அனைவருக்கும் புகழாரம் பத்திரிகையாளர்கள் சூட்டிவருகின்றனர்
செய்தித்துறை அமைச்சர் தலைமையில் பத்திரிகையாளர் நல வாரியக் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக சட்டசபையில் நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், பத்திரிகையாளர்களுக்கு நலவாரிய உதவித்தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் “பத்திரிகையாளர் நல வாரியம்” அமைக்கப்படும் என அறிவித்தார். இதனை தொடர்ந்து அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது; “தமிழக செய்தித்துறை அமைச்சர் 2021-22 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றப் பேரவைக் கூட்டத் தொடரில், 6.9.2021 அன்று நடைபெற்ற செய்தி மற்றும் விளம்பரம் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான அறிவிப்புகளில், தமிழகத்தில் முதன் முறையாக, உழைக்கும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக தமிழக முதல்வர் அறிவித்துப் பெருமை சேர்த்துள்ளார்.
அதனடிப்படையில் உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செவ்வனே செயல்படுத்துவதோடு, நலவாரிய உதவித்தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில், ‘பத்திரிகையாளர் நல வாரியம்’ அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.
செய்தித்துறை அமைச்சரின் அறிவிப்பிற்கிணங்க உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செவ்வனே செயல்படுத்துவதோடு, நல வாரிய உதவித்தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் ‘பத்திரிகையாளர் நல வாரியம்’ ஒன்றை உருவாக்கி ஆணை வெளியிடப்பட்டது.
பத்திரிகையாளர் நல வாரியத்துக்கு வரப்பெறும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, பயனாளிகளைத் தேர்வு செய்து, நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு, பத்திரிகையாளர் நல வாரியக் குழு ஒன்றை அமைத்து, அதற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை பின்வருமாறு நியமித்து அரசு ஆணையிடுகிறது.
இந்த நல வாரியத்தின் தலைவராக செய்தித்துறை அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மைச் செயலாளர், வீட்டுவசதி (ம) நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர், தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளர், தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை ஆணையர், நில நிர்வாகத்துறை ஆணையர் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர்/துணைச் செயலாளர் உள்ளிட்டோர் அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சிவந்தி ஆதித்யன் பாலசுப்பிரமணியன் (தினத்தந்தி குழுமம்), ஆர்.எம்.ஆர்.ரமேஷ் (தினகரன் நாளிதழ்), பி.கோலப்பன் (துணை ஆசிரியர், தி இந்து), எஸ்.கவாஸ்கர் (செய்தியாளர், தீக்கதிர் நாளிதழ்), எம்.ரமேஷ் (சிறப்பு நிருபர், புதிய தலைமுறை தொலைக்காட்சி), லெட்சுமி சுப்பிரமணியன் (முதன்மை சிறப்பு நிருபர், தி வீக் செய்தி வார இதழ்) ஆகியோர் அலுவல்சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அரசாணையின்படி, பத்திரிகையாளர் ஓய்வூதியப் பரிசீலனைக் குழு கலைக்கப்படுவதுடன், பத்திரிகையாளர் நலவாரிய புதிய நல உதவித் திட்டங்களுக்கு அமைக்கப்படும் மேற்காணும் குழுவே பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் குறித்த மனுக்களையும் பரிசீலிக்கும். இந்த நடவடிக்கைகள் அனைத்தும், நீதிப் பேராணை மனு என் 32091/2019-ன் மீதான மாண்பமை சென்னை உயர் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பிற்கு உட்பட்டதாகும்” இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Previous Post

ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப்ள்ளியில் மாணவர்கள் நாளிதழ் வாசிக்க ஏற்பாடு

Next Post

திருமருகல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் பார்வை

Next Post
திருமருகல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் பார்வை

திருமருகல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் பார்வை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In