எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.
நாகப்பட்டினம்
பிப் 24
இலங்கையின் காங்கேசன்துறை கடற்பரப்பிற்குள் எல்லைதாண்டி மீன் பிடியில் ஈடுபட்டதாக நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் சேர்ந்த இரண்டு படகுகளில் சென்ற 22 மீனவர்களையும் இரு விசைப் படகுகளையும் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றத்தில் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.நாகப்பட்டினம் சிவா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 13 மீனவர்களும் புதுச்சேரி , காரைக்கால் பகுதியைச் சேர்ந்த தங்கராசு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஒன்பது மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் இன்று அதிகாலை இலங்கை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு சென்று
யாழ்ப்பாணம் நீர் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய எல்லைக்குள்மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை அத்துமீறி இலங்கை கடற்படை கைது செய்யும் நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என மத்திய ,மாநில அரசுகளுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

