தேசிய அளவிலான கூடோ போட்டி- ஒரு தங்கம் உள்ளிட்ட 8 பதங்கங்களை பெற்ற நாகை மாணவர்கள் மற்றும் மாணவிகள்.
வேதாரணியம்
பிப் 23
தேசிய அளவிலான கூடோ போட்டி இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்றது . இதில் 14 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் நாகை மாவட்டம் ஆயக்காரன்புலம் R.V.S பாரத் பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவி க.அனுஷா கலந்து கொண்டு தங்கப் பதக்கம் மற்றும் வெள்ளிபதக்கம்வென்றார். மேலும் இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் செந்தில் வெள்ளிப பதக்கமும் , சந்தீஷ் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கமும் பெற்றனர். மேலும் கரியா பட்டினத்தைச் சேர்ந்த ரோஜா வெள்ளிப் பதக்கத்தையும், தினேஷ்குமார் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.
இப்போட்டியில் 32 மாநிலங்களைப் சார்ந்த மாணவ மாணவியர் பங்கேற்றனர். இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றிப் பெற்று இந்திய அளவில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்து தந்துள்ளனர். கூடோ பயிற்சியாளர் முருகேசனை மாணவ மாணவியரின் பெற்றோர்கள் பாராட்டினர். பதக்கம் வென்று மாணவ மாணவியர்கள் சொந்த ஊர் திரும்பிய போது வேதாரண்யம் பேருந்து நிலையத்தில் உறவினர்கள் நண்பர்கள் மாணவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்று மகிழ்ந்தனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

