வேதாரண்யம் அருகே 3.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் பறிமுதல் – பெண் கைது.
வேதாரணியம்
பிப் 22
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு ஊராட்சியைச் சேர்ந்தவர் கணேசன் மனைவி ஈஸ்வரி. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் காரணத்தால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தது. இதை முன்கூட்டியே அறிந்து 48 பாட்டில்கள் கொண்ட 60 பெட்டிகளில் 2880 மதுபாட்டில்கள் விற்பனைக்காக சட்ட விரோதமாக வைத்திருந்தார்.


இதன் மதிப்பு 3.50 லட்சம் ரூபாயாகும். மாவட்ட காவல் துணைகண்காணிப்பாளர் முருகவேல் உத்தரவின் பேரில் வேதாரண்யம் காவல் ஆய்வாளர் சுப்ரியா தலைமையிலான காவல்துறையினர் சட்டவிரோதமாக வைத்திருந்த மது பாட்டில்களை கைப்பற்றி, ஈஸ்வரியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

