பதட்டமான வாக்குச்சாவடிகளை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் IPS ஆய்வு செய்தார்
தமிழகம் முழுவதும் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் பதட்டம் இல்லாமல் தங்கள் வாக்குகளை செலுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் IPS தலைமையில் மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் 55 இடங்களில் 173 பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அவற்றினை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்.மேலும் அவர் கூறியதாவது, மக்கள் பயம் இல்லாமலும் பதட்டம் இல்லாமலும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்களிக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதட்டமான வாக்குச்சாவடிகளில் ஏனைய பணியில் உள்ள காவலர்களை தவிர கூடுதலாக காவலர்கள் நியமிக்கபட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காவல்துறைக்கு உறுதுணையாக ஊர் காவல் படை வீரர்களும், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே போடப்பட்டுள்ள பறக்கும்படை தவிர மேலும் 155 பறக்கும் படைகள் போடப்பட்டு மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

