நாசரேத் பேரூராட்சியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஊர்வசி அமிர்த ராஜ் எம்.எல்.ஏ., தேர்தல் பிரச்சாரம்!
நாசரேத்,பெப்ரவரி.16: நாசரேத் பேரூராட்சியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஊர் வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., தேர்தல் பிரச்சாரம் மேற்கொண் டார்.
நாசரேத் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் களை ஆதரித்து ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பின ரும்,தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான ஊர் வசி அமிர்தராஜ் தேர்தல் பிரச்சா ரம் செய்தார். நாசரேத் பேருந்து நிலையம் அருகில் அவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியதா வது:-நாசரேத் பேரூராட்சியில் திமுக கூட்டணி சார்பில் போட்டி யிடும் அனைத்து வேட்பாளர்க ளையும் வெற்றி பெறச் செய்யுங் கள்.அனைவரும் வெற்றி பெற்ற வுடன் மக்கள் குறைகள் அடிப்ப டைத் தேவைகள் தமிழக அரசு மூலம் நிறைவேற்றி தரப்படும்.


மேலும் தமிழக முதல்வர் மூலம் அரசு கொண்டுவரும் திட்டங்கள் நமக்கு வந்து சேரும் மதசார்பற்ற கூட்டணிக்கு நீங்கள் வாக்களித்து அனைவரையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் இந்தப்பகுதி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களும் கனிமொழி கருணாநிதி அவர்க ளும் இப்பகுதிகுறைகளை பூர்த்தி செய்து அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதற்கு கொடுத்து வருகின்றனர்.நாசரேத் பேரூராட் பேரூராட்சியில் திமுக கூட்டணி வெற்றி பெற்றால் இப்பகுதியை மேம்படுத்த வசதியாக இருக்கும். மேலும் காங்கிரஸ் பேரியக்கத் தின் தலைவர் ராகுல் நாசரேத் பகுதி மக்களை மறக்கவில்லை. நாசரேத் பகுதியை உயரத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என்ற எண்ணத்தில் அவர் செயல்பட்டு வருகிறார்.என்னை பார்க்கும் போதெல்லாம் நாசரேத் மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்று அடிக்கடி என்னிடம் கேட்டுள்ளார் எனவே நீங்கள் திமுக கூட்டணி வெற்றி பெற அனைவரும் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து அமோகவெற்றியை தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தேர்தல் பிரச்சாரத்தின் போது நாசரேத் நகர திமுக செயலாளர் ரவி செல்வக்குமார், நாசரேத் நகர காங்கிரஸ்தலைவர் சந்திரன் உட் பட திமுக காங்கிரஸ் மதிமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

