2022 உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது
அரியலூர் மாவட்டத்தில் 2022 உள்ளாட்சி தேர்தலில் பொது மக்கள் ஜனநாயக முறைப்படி எந்தவித அச்சுறுத்தலும் இன்றி பாதுகாப்பாக வாக்களிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் அசோக்குமார் மற்றும் திருமேனி ஆகியோர் முன்னிலையில் அரியலூர் மாவட்ட காவல்துறையின் கொடி அணிவகுப்பு இன்று நடைபெற்றது.
உடையார்பாளையம், ஜெயங்கொண்டம், வரதராஜன் பேட்டை மற்றும் தென்னூர் ஆகிய 4 இடங்களில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் மணவாளன், ஜெயங்கொண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கலைக்கதிரவன் , மற்றும் ஜெயங்கொண்டம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரம், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் பத்மநாதன் ஆகியோர் கொடி அணிவகுப்பை வழிநடத்திச் சென்றனர்.
இந்தக் கொடி அணிவகுப்பில் உதவி ஆய்வாளர்கள், ஆயுதப்படை மற்றும் உள்ளூர் போலீசார் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பிப்ரவரி மாதம் 19ம் தேதி நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் கொடி அணிவகுப்பு பதட்டமான பகுதிகளில், பொதுமக்கள் அச்சமின்றி அவர்களது ஜனநாயக கடமையாற்றுவதற்கும், அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கு இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

