அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விளந்தை கிராமத்தில் நூலகம் திறப்பு
திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் I.P.S., உத்தரவின்படி திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் . சரவணசுந்தர் I.P.S., மற்றும் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் காவல்துறை சார்பாக 10.02.2022 -ம் தேதி அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விலந்தை கிராமத்தில் உள்ள அரசு கட்டிடத்தில் நூலகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். உடன் ஜெயங்கொண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கலை கதிரவன் மற்றும் ஆண்டிமடம் காவல் ஆய்வாளர் குணசேகரன் இருந்தனர்.
இந்த நூலகத்தில் மாணவர்களின் எதிர்காலத்திற்கும், இளைஞர்களின் வாழ்க்கையினை மேம்படுத்தவும், சிறுவா்களின் கற்பனை திறனை மேம்படுத்தவும், முதியவர்களின் பொழுதினை பயனுள்ளதாக மாற்றும் வகையில் போட்டித் தேர்விற்கு தயராகும் நபர்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு தலைவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் பொது அறிவு நூல்கள் உள்ளடக்கிய புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது. இதனை பொது மக்கள் பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்
இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ – மாணவிகள் கலந்துகொண்டு நூலகத்திற்கு மகிழ்ச்சியுடன் வரவேற்பளித்தனர்.

