கோவில்பட்டியில் 12 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் மற்றும் சிறுமியின் தாயாரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: நாமக்கல் மாவட்டம், ஆதனூர், விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி மகன் சங்கர் (24). இவருக்கும் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கும் கடந்த 19.4.2021ல் திருமணம் நடந்துள்ளது. தற்போது சிறுமி கர்ப்பமாக உள்ளார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் மைனர் எனத் தெரியவந்தது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக சமூக நலத்துறை அதிகாரி பிரியாதேவி கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் நாககுமாரி விசாரணை நடத்தி, போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில் வழக்குப் பதிந்து சங்கர், மற்றும் சிறுமியின் தாயாரை கைது செய்தார். பாதிக்கப்பட்ட அந்த சிறுமி மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

