விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வருகின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
வருகின்ற 19.02.2022 அன்று நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்துபாலம் ஆனந்த விநாயகர் கோவில் பகுதியில் தொடங்கி காமராஜர் நகர், மதுரை ரோடு, சன்னதி தெரு, கீழரத வீதி, மார்க்கெட் ரோடு, வேம்பார் ரோடு வழியாக விளாத்திகுளம் காவல் நிலையம் வந்து நிறைவடைந்தது.

