22வது மெகா தடுப்பூசி முகாம்
வேதாரண்யம் பிப் 10
நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் 10,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு12.02.2022 அன்று இருபத்திரெண்டாவது
மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் கோவிட் – 19 கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையான வகையில் கட்டுபடுத்திட மாண்புமிகு தமிழக முதல்வர் ஆணையின் படி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
கொரோனா பெருந்தொற்றினை கட்டுப்படுத்திட தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் எடுத்துவருகிறது.
கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையான வகையில் வெல்ல தடுப்பூசி ஒன்றே பேராயுதம் என்பதால் 12.02.2022-ஆம் தேதி சனிக்கிழமை காலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணி வரை அனைத்து அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையம் மற்றும் 350 சிறப்பு முகாம்களில் 10 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.
எனவே, மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் மற்றும் நடக்க முடியாத நபர்களுக்கு வீட்டிற்கே சென்று தடுப்பூசி போட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், விடுபட்டு போன முன்களப்பணியாளர்கள், முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மற்றும் இரண்டாவது தடுப்பூசி தவணை செலுத்திக் கொள்ளவுள்ள நபர்கள் தானாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் 13.05.21க்கு முன் இரண்டாவது தடுப்பூசி செலுத்திக் கொண்ட 60 வயதிற்கு மேற்பட்டு இணைநோய் உள்ளவர்கள், சுகாதாரபணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் ஆகியோர் அனைவரும் தவறாது பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்,
வேதாரண்யம்.

