வேதாரண்யம் வேதாமிர்த ஏரியில் தவறி விழுந்து முதியவர் சாவு .
வேதாரண்யம் பிப் 10,
நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட நாகை சாலையில் உள்ள வேதாமிர்த ஏரியின் கரையருகே இன்று காலை ஆண் சடலம் ஒன்று மிதந்தது. ஏரியிலிருந்து சடலத்தை நகராட்சியினர் மீட்டனர் . மீட்கப்பட்ட சடலம் ஏரியின் அருகே நீண்ட காலமாக தங்கியிருந்த சாமியார் என்றும், இவர் வேதாரண்யம் அருகேயுள்ள பெரியகுத்தகை கிராமத்தைச் சேர்ந்த ரெங்கசாமி (வயது 65) என்பதும் தெரியவந்தது.. இவர் நேற்றிரவு ஏரியில் தவறி விழுந்திருக்கலாம் என வேதாரண்யம் போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து வேதாரண்யம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

