மதுரையில் காவல் உதவி ஆணையர் தலைமையில் போலீஸ் அணிவகுப்பு.
~~~~~~~~~~~~~~~
மதுரையில் ஜெய்ஹிந்துபுரம் காவல் சரக எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று போலீஸ் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
இந்த அணிவகுப்பு சோலை அழகுபுரம் , பாரதியார் ரோடு, ஜெய்ஹிந்துபுரம் மெயின் ரோடு , சுப்பிரமணிய புரம், எம்.கே. புரம், பகுதிகளில் பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் நடைபெற்றது.
இந்த போலீஸ் அணிவகுப்பு தெற்கு வாசல் காவல் சரக காவல் உதவி ஆணையர் சண்முகம் அவர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் பிரபு, கதிர்வேல், முத்துக்குமார், புவனேஸ்வரி, ராதிகா, சந்தானமேரி, ஸ்டெல்லா பாய் , நான்கு காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 32 காவலர்கள் அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.
சு.இரத்தினவேல்.
செய்தியாளர்.
மதுரை

