• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

குரவப்புலத்தில் 1250 வகை பாரம்பரிய நெல் விதைகளை பயிரிட்டு ஆவணப்படுத்தும் சிவரஞ்சனி சரவணகுமார்- கின்னஸில் இடம் பெற செய்ய வேண்டும் என பிஆர் பாண்டியன் வேண்டுகோள்

policeseithitv by policeseithitv
February 8, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
குரவப்புலத்தில் 1250 வகை பாரம்பரிய நெல் விதைகளை பயிரிட்டு ஆவணப்படுத்தும் சிவரஞ்சனி சரவணகுமார்- கின்னஸில் இடம் பெற செய்ய வேண்டும் என பிஆர் பாண்டியன் வேண்டுகோள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

குரவப்புலத்தில் 1250 வகை பாரம்பரிய நெல் விதைகளை பயிரிட்டு ஆவணப்படுத்தும் சிவரஞ்சனி சரவணகுமார்- கின்னஸில் இடம் பெற செய்ய வேண்டும் என பிஆர் பாண்டியன் வேண்டுகோள்.

வேதாரணியம்

பிப் 08

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த குரவப்புலம் ஊராட்சியில் சிவரஞ்சனி சரவணகுமார் 1250 வகை பாரம்பரிய மருத்துவ குணம் கொண்ட நெல் வகைகளை பயிரிட்டுள்ளனர். 90 நாட்கள் நெல் பயிர் முதல் 180 நாட்கள் நெல் பயிர் வரை பயிரிடப்பட்டுள்ளது. அதனை தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் நேரில் பார்வையிட்ட பின்

செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் நம்மாழ்வார் வழியை பின்பற்றி பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் மீட்டெடுப்புகளை தமிழக அரசு அங்கீகரித்தது. அவரது மறைவுக்குப் பின் தற்போது நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த குரவப்புலம் ஊராட்சியை சேர்ந்த சிவரஞ்சனி சரவணகுமார் தம்பதியர் இந்தியாவில் பல மாநிலங்களுக்கு சென்று மருத்துவ குணம் கொண்ட பாரம்பரிய 1250 வகையான நெல் ரகங்களை மீட்டெடுத்துள்ளனர்.

அதனை தனக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் விளை நிலத்தில் 1250 பாத்திகள் அமைத்து அவற்றை அடையாளப்படுத்தி ஒவ்வொரு பாத்தியிலும் ஒவ்வொரு வகையான நெல்மணிகளை விதைத்துள்ளனர். அதனை தற்போது அறுவடை செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

1250 வகையான நெல்மணிகளை ஆவணப் படுத்தும் நோக்கோடு ஒவ்வொரு வகை நெல் கதிர்கள அறுவடை செய்து அடையாள குறியின் அடிப்படையில் ரகங்களுக்கான பெயரை உறுதிப்படுத்தி தனித்தனியே பதப்படுத்தி வருகின்றனர். பதப்படுத்தப்பட்ட நெல்மணிகளை தனித்தனி கண்ணாடி குடுவைகளில் அடைக்கப்படு அதனை காட்சிப்படுத்தி வருகின்றனர்.

இப்பணியை லாபநோக்கமின்றி சேவை மனப்பாண்மையில் அர்ப்பணிப்பு உணர்வோடு மேற்கொண்டிருக்கிறார்கள்.

இதனை பாராட்டுவதற்கும் வாழ்த்துவதற்கும் வார்த்தைகளே இல்லாத நிலையில் இமாலய சாதனையை புரிந்துள்ளார்கள். இவர்களது மீட்டெடுப்புகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் கின்னஸில் இடம் பெறுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழக அரசு உரிய அங்கீகாரம் அளித்து அவரது மீட்டெடுப்புகளில் உள்ள நெல் வகைகளின் மருத்துவ குணங்களை கண்டறிந்து அவற்றை தமிழகத்தில் அனைத்து பகுதிகளிளும் பயிரிடுவதற்கு ஊக்கப்படுத்த வேண்டும்.

தேவையான தொழில்நுட்பங்களையும் ஆலோசனைகளையும் உடனடியாக வேளாண் பல்கலைக்கழக

வேளாண் விஞ்ஞானிகள் குழுவை அனுப்பி வைத்து உரிய ஆய்வுகளுக்கு உட்படுத்தி விதை பரவலாக்க திட்டத்தை அரசு கொள்கை ரீதியாக திட்டமிட முன்வரவேண்டும்.

குறைந்த செலவில் நிறைந்த மகசூல் பெறுகிற வகையில் பாரம்பரிய வேளாண் முறைகளையும் இயற்கை உர பயன்பாட்டையும் ஊக்கப்படுத்தவும் வேண்டும்.

கால்நடை வளர்ப்பை ஊக்கப்படுத்தும் வகையில் திட்டமிடுவது அவசியம் ஆகிறது.

தமிழக அரசு பாரம்பரிய நெல் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் சிவரஞ்சனி சரவணகுமாரின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு ஆவணப்

படுத்துவதற்ககான முழு செலவையும் அரசே எற்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளின் மகசூல் இழப்பை கருத்தில் கொண்டும்,மருத்துவ குணத்தை கவனத்தில் கொண்டும் கூடுதல் விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்திடவேண்டும். அதனை மருத்துவமனைகள், ஊட்டச்சத்து மையங்கள், சத்துணவு கூடங்களில் உணவுப் பொருட்களாக பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும்.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு இரு மாநிலங்களும் ஒப்புக்கொண்டால் அனுமதிக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முரணானது. உச்சநீதிமன்றத்தின் நேரடி பார்வையில் தன்னாட்சி அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பாட்டில் உள்ளபோது புதிய அணை கட்டுவதற்கான சமரச முயற்சியில் மறைமுகமாக மத்திய அரசு ஈடுபடுவது தமிழக நலனுக்கு எதிரானது.

காவிரி குறித்து விவாதிப்பதற்கும், பதிலளிப்பதற்கு மத்திய அரசிற்கு எந்த வகையிலும் இடமளிக்க தமிழகம் துணை போகக்கூடாது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தவும்

தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்பட தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்க முன்வர வேண்டும் என தெரிவித்தார்

உயர்மட்டக்குழு உறுப்பினர் பா.அசோகன் வேதாரண்யம் ஒன்றிய தலைவர் மணக்குடி கருணைநாதன், செயலாளர் தாணிக்கோட்டகம் ரவி, பொருளாளர்

கணேஷ்பாண்டியன், இயற்கை வேளாண் ஆர்வலர்கள் ப. பரஞ்ஜோதி , இர.சிவாஜி, ஆதிக்குமார், கு.அசோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

செய்தி தொகுப்பு

Dr.எல்விஸ் லாய்

மச்சோடா

நாகை மாவட்ட

செய்தியாளர்.

Previous Post

இ. ஆபீஸ் நிர்வாகத்தில் முதல் பரிசு பெற்ற தென் மண்டல ஐஜி அலுவலகம்

Next Post

மதுரையில் காவல் உதவி ஆணையர் தலைமையில் போலீஸ் அணிவகுப்பு

Next Post
மதுரையில் காவல் உதவி ஆணையர் தலைமையில் போலீஸ் அணிவகுப்பு

மதுரையில் காவல் உதவி ஆணையர் தலைமையில் போலீஸ் அணிவகுப்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In