இ. ஆபீஸ் நிர்வாகத்தில் முதல் பரிசு பெற்ற தென் மண்டல ஐஜி அலுவலகம்.
~~~~~~~~~~~~~~
இ ஆபீஸ் நிர்வாகத்தில் தமிழக டிஜிபி யின் முதல் பரிசை பெற்ற தென் மண்டல ஐஜி அலுவலகம் – பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பண வெகுமதி வழங்கி தமிழக டிஜிபி பாராட்டு.*
தமிழ்நாடு மாநில அளவில் காவல்துறையின் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் மற்றும் திறம்பட பணி செய்யும் மாவட்டம் மற்றும் அலுவலகம் ஆகியவற்றை அவர்களின் செயல்பாடுகள் அடிப்படையில் தேர்வு செய்து அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும் பண வெகுமதியும் அளிக்க தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
அதனடிப்படையில் இ ஆபீஸ் சம்பந்தமான அனைத்து வேலைகளையும் துரிதமாகவும் சிறப்பாகவும் செய்து முடித்த தென் மண்டல ஐஜி அலுவலகம் ஆனது முதல் பரிசை தட்டிச் சென்றது.
மேற்படி முதல் பரிசுக்குரிய தொகை ரூபாய் 10 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்களுக்கு அனுப்பி வைத்தார்கள் இவ்வாறு அனுப்பப்பட்ட பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் தென் மண்டல காவல்துறை தலைவர் திரு எஸ் அன்பு ஐபிஎஸ் அவர்கள் அமைச்சுப் பணியாளர்களிடம் வழங்கினார்கள்.
மேலும் இதே போன்று வரும் காலங்களில் பணியாற்றி சிறந்த நற்பெயரை பெறவேண்டுமென்று ஐஜி அவர்கள் அமைச்சுப் பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவித்து ஊக்குவித்தார்கள்.
சு.இரத்தினவேல்.
செய்தியாளர்
மதுரை.

