தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்வு
நாகப்பட்டினம்
பிப் 05
மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளையொட்டி ஜனவரி 30 முதல் பிப்ரவரி 13 வரை தொழுநோய் விழிப்புணர்வு வாரமாக மாவட்ட நிர்வாகத்தால் அனுசரிக்கப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப் பள்ளியில் தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்வு சுகாதாரத் துறையால் நடத்தப்பட்டது.
மாணவர்களுக்கு தொழுநோய் பற்றிய விவரங்கள் வழங்கப்பட்டன. அக்கம்பக்கத்தில் யாருக்கேனும் இதன் அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு விழிப்புணர்வூட்டவும் அறிவுரை வழங்கப்பட்டது.
தொழு நோய் பற்றிய மாவட்ட ஆட்சியர் அவர்களின் குரல் பதிவு மாணவர்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.
மாணவர்கள் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
பின்பு மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
பள்ளித் தலைமையாசிரியர் சிவா அவர்கள் ஏற்பாடுகளை செய்து இருந்தார்.
சுகாதார பயிற்றுனர் திரு. சதாசிவம், சுகாதார ஆய்வாளர்கள் திரு. அசோகன் மற்றும் திரு. கணேசன் ஆகியோர் சுகாதாரத் துறை சார்பாக கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கி பரிசோதனை மேற்கொண்டனர்.

செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

