கோடியக்கரையில் மின்சாரம் தாக்கி மீனவர் பலி.
வேதாரணியம்
பிப் 04
நாகப்பட்டினம் மாவட்டம்,
வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரையில் தர்மராஜன் என்பவருக்கு சொந்தமான கொட்டகையில், கடந்த இரண்டு மாதமாக குடும்பத்துடன் தங்கி மீன்பிடித்து வரும் காரைக்கால் , காளி குப்பம் பகுதியைச் சேர்ந்த
சுப்பையன் (43) என்ற மீனவர்
தங்கியிருக்கும் கொட்டகையில் ஹீட்டரில் வெந்நீர் சுட வைத்தபோது, சுவிட்ச் ஆப் செய்து விட்டதாக நினைத்து தண்ணீரில் கை வைத்தபொழுது மின்சாரம் பாய்ந்து இறந்து விட்டார். மின்சாரம் தாக்கி மீனவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

