ஆண் காவலர்களுக்கான கைப்பந்து அணி – ஜவஹர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
வேதாரண்யம் பிப் 4
நாகப்பட்டினம் ஆயுதப்படையில் ஆண் காவலர்களுக்கான கைப்பந்து அணியினை நாகை மாவட்ட எஸ்.பி ஜவஹர் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் அந்த கைபந்து அணிக்கு எவரெட்ஸ் எனபெயர் சூட்டப்பட்டது.
இன்று 04.02.2022 நாகப்பட்டினம் ஆயுதப்படையில் ஆண் காவலர்களுக்கான கைப்பந்து அணியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர். கொடியசைத்து துவங்கி வைத்தார்கள் பின்னர் இரு அணியினர்களுக்கான கைப்பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு துணைகாவல் கண்காணிப்பாளர் சுந்தர்ராஜ் (ஆயுதப்படை) அவர்கள் பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இனிவரும் காலங்களில் நாகை மாவட்டத்தில் சிறப்பான அணியாக எவரெஸ்ட் அணி செயல்பட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார்.


இந்நிகழ்ச்சியில் ஆய்வாளா் சந்திரமோகன். வாகன பிரிவு ஆய்வாளர் விஜய் லூர்துபிரவீன், உதவி ஆய்வாளர்கள் ஸ்டீபன், சேகர், ராமலிங்கம், சேகர், அன்பரசு மற்றும் காவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்,
வேதாரண்யம்.

