வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் ஆய்வு
வேதாரண்யம் பிப் 3
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் செட்டிபுலம், கத்தரிபுலம் ஆகிய ஊராட்சிகளில் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் வீடு கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளையும், வேதாரண்யம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களையும், கீழையூர் ஊராட்சி ஒன்றியம் ஈசனூர், திருப்பூண்டியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தையும், தலைஞாயிறு பேரூராட்சி பிரிஞ்சுமூலை கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தையும், அங்குள்ள கிராம கூட்டுறவு அங்காடியினையும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டுஆய்வுசெய்தார்.
இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் இராமலிங்கம் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்,
வேதாரண்யம்.

