கீழ்வேளுர் பகுதியில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேதாரண்யம் பிப் 3
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு மேற்கொண்டார்;.
கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியம் ஆழியூர், திருக்கண்ணங்குடி, பட்டமங்களம், இராதாமங்களம் ஆகிய ஊராட்சியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்த பின் திருக்கண்ணங்குடி, இராதாமங்களம், தேவூர் போன்ற ஊராட்சிகளில் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் வீடு கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளையும், வடக்காலத்தூர் ஊராட்சியில் ரூ.16.61 இலட்சம் மதிப்பீட்டில் சுமார் 250மீ தொலைவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும், இலுப்பூர் ஊராட்சியில் பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.297 இலட்சம் மதிப்பீட்டில் 4360மீ தொலைவில் சாலை அமைக்கும் பணியினையும், மற்றும் 23.20 இலட்சம் மதிப்பீட்டில் 480மீ தொலைவில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினையும், தேவூர் ஊராட்சியில் ரூ.14.40 இலட்சம் மதிப்பீட்டில் 270மீ தொலைவில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினையும், மேலத்தெருவில் ரூ.12.19 இலட்சம் மதிப்பீட்டில் 284மீ தொலைவில் தார் சாலை அமைக்கும் பணியினையும், வடக்கு தெருவில் ரூ.14.50 இலட்சம் மதிப்பீட்டில் 330மீ தொலைவில் தார் சாலை அமைக்கும் பணி போன்ற வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதையும், தேவூர் ஊராட்சியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசுஆரம்ப சுகாதார நிலையத்தையும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் பசுபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தியாகராஜன், ராஜகோபால், உதவிபொறியாளர்கள் பாலமுருகன், ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்,

