மணிபர்ஸை உரியவர்களிடம் ஒப்படைக்க உதவிய மூவரை பாராட்டிய உதவி ஆணையர்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மதுரையில் கேட்பாரற்று கிடந்த பர்ஸை உரியவர்களிடம் ஒப்படைக்க உதவிய மூவருக்கு உதவி ஆணையர் பாராட்டு தெரிவித்தார்.
நேற்று மாலை 03.00 மணியளவில் மதுரை மாநகர், அண்ணாநகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட அருண் பேக்கிரி அருகில் கேட்பாராற்று கிடந்த ஒரு மணிபர்ஸ்சை வண்டியூர் பகுதியை சேர்ந்த .மீனா என்பவர் எடுத்து, தான் வீட்டு வேலை பார்க்கும் டாக்டர் .நித்தியா, BHMS., என்பவரிடம் கொடுத்துவிட்டு, மேற்படி விபரத்தை நித்தியா, BHMS,, அவர்கள்: பி4 கீரைத்துறை (சட்டம் மற்றும் ஒழுங்கு) காவல்நிலைய காவலர் 3803 .A,கார்த்திக் என்பவரிடம் கொடுத்துள்ளார்.
அவர் இது சம்பந்தமாக உடனடியாக காவல் உதவி ஆணையர், தெற்குவாசல் சரகம், மதுரை மாநகர் சண்முகம் அவர்களிடம் விபரத்தை தெரிவித்து மணி பர்ஸிற்கு சொந்தகாரரான அர்ஜீன், 53/20, மவுலானா சாகீப் தெரு, அண்ணாநகர், மதுரை-20 என்பவரை வரவழைத்து அவரிடம் மேற்படி மணி பர்சிலிருந்த அடையாள அட்டைகளான 1) Driving Licence 2} PAN Card 3) Aadhar Card 4} RC Book 4) ID Card 4) Indian Bank ATM Card 5) HDFC ATM Card 6) ICICI Bank ATM Card மற்றும் அவர் சொந்த பணம் ரூ.10,180/ அவரிடம் நல்ல முறையில் ஒப்படைக்கப்பட்டது.
அவரது சார்பாகவும், காவல்துறை சார்பாகவும் பணி பர்ஸை எடுத்து கொடுத்த .மீனா, .டாக்டர். நித்தியா, BHMS., மற்றும் முதல்நிலைய காவலர் .A.கார்த்திக் ஆகியோர்களுக்கு உதவி ஆணையர் சண்முகம் பாராட்டும் நன்றியும் தெரிவித்தார்.
சு.இரத்தினவேல்.
செய்தியாளர்.
மதுரை.

