நாகை அருகே கஞ்சா கடத்த முயன்ற 6 நபர்கள் கைது – 500 கிலோ கஞ்சா பறிமுதல்
வேதாரண்யம் பிப் 1
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் கண்காணிப்பு பணியில் செய்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று காலை நாகப்பட்டினம் புத்தூர் ரவுண்டானா அருகே கண்காணிப்பு பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது அசோக் லைலண்ட் வாகனத்தை மறித்து சோதனை செய்த போது அதில் சுமார் 1 கோடி மதிப்புள்ள 2 கிலோ கொண்ட 250 கஞ்சா பொட்டலங்கள் ஆக கூடுதல் 500 கிலோ இருந்ததையடுத்து அதை பறிமுதல் செய்தனர்.

மேலும் சேகர் (எ) சந்திரசேகர் என்பவர் அக்கரைபேட்டைச் சேர்ந்த சபாபதி மகன் சிங்காரவேல் என்பவரின் படகின் மூலம் இலங்கைக்கு கடத்த இருந்ததும் தெரியவந்ததையடுத்து, இந்த வாகனத்துடன் வந்த மற்ற இரண்டு வாகனங்களையும், அந்த வாகனங்களில் வந்த 6 நபரை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளா்,
வேதாரண்யம்.

