உலக தொழுநோய் ஒழிப்பு தின உறுதிமொழி
வேதாரண்யம் ஜன 31
உலக தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் டாக்டா் அருண்தம்புராஜ் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் மருத்துவ துறை அலுவலர்கள், பயிற்சி செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.
உலக தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்கிறேன். என்னவெனில், தொழுநோய் மற்ற நோய்களைப் போல கிருமி நோயினால் வருகிறது. தொழுநோய், மைக்கோபாக்டீரியம் லெப்ரே என்ற பாக்டீரியா கிருமியினால் காற்றின் மூலம் பரவுகிறது என்பதை நான் அறிவேன். உணர்ச்சியற்ற தேமல் அல்லது படை போன்றோ தொழுநோயினால் உடல் குறைபாடு உள்ளவர்களை எனது குடும்பத்திலோ அல்லது வீட்டின் அருகில் உள்ளவர்களோ, சமூகத்திலோ இருந்தால் உடன் அவர்களை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்வேன். அவர்களை அன்பாகவும், எனது குடும்ப உறுப்பினர்கள் போலவும் வேறுபாடு இல்லாமல் உரிய மரியாதையுடன் நடத்துவேன்.
தொழுநோய் குணமாக கூடியது, ஆரம்ப நிலை சிகிச்சை உடல் குறைபாட்டை ஏற்படுத்தாது, தொழுநோயாளிகளை ஒதுக்கக்கூடாது போன்ற விபரங்களை ஊர் முழுவதும் தெரிவித்து விழிப்புணர்வினை ஏற்படுத்துவேன், தேசபிதா மகாத்மாகாந்தியின் கனவை நனவாக்கும் வகையில் தொழுநோய் இல்லா இந்தியா உருவாக அனைவருடன் இணைந்து ஒத்துழைப்பேன் என்று உறுதி கூறுகிறேன் என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் கூற அனைவரும் வழிமொழிந்தனர்.
அதனை தொடர்ந்து தொழுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இரண்டு ஊனமுள்ள தொழுநோயாளிகளுக்கு பொன்னாடை போர்த்தி மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் கௌரவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவகல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.விஸ்வநாதன், இணை இயக்குநர் நலப்பணிகள் மரு.ராணி, துணை இயக்குநர் தொழுநோய் மரு.எஸ்.சங்கரி, நிலைய மருத்துவ அலுவலர் மரு.உமாமகேஸ்வரன், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசுஅலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்டச் செய்தியாளா்
வேதாரண்யம்

