கொரோனா முழு ஊரடங்கு – நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
வேதாரணியம்
ஜன 23
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக நாகை மாவட்டத்தில் மருந்துக்கடைகள் , பால் விற்பனைக் கடைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் மாவட்டம் முழுமையும் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. போலீஸ்சார் வாகன சோதனை மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுகொண்டிருக்கின்றனர்.


மேலும் மாவட்டம் முழுவதும் படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமலும் , மீன் விற்பனையும் இன்றி கடற்கரைப் பகுதிகள் காணப்படுவதால கூட்டமின்றி காணப்படுகிறது. மீனவர்கள் தங்களது படகுகளை நிறுத்தி வலைகளை பழுது பார்த்து வருகின்றனர். இதனால் நாகை மாவட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் வீடுகளில் தந்து மடைந்துள்ளனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

