நெல்லை ஆயுதப்படைக்கு ரூபாய் 3.5 கோடி மதிப்பில் புதிய நிர்வாக கட்டிடத்திற்கு பூமி பூஜை
நெல்லை மாநகர ஆயுதப்படைக்கு புதிய நிர்வாக கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது
நெல்லை மாநகர ஆயுதப்படை வளாகத்தில் ரூபாய் 3.5 கோடி மதிப்பில் 18 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் 3 தளங்கள் கொண்ட புதிய ஆயுதப்படை நிர்வாகக் கட்டிடம் கட்டப்பட உள்ளது இதற்கான பூமி பூஜை மாநகர காவல் ஆணையாளர் துறை குமார் தலைமையில் அடிக்கல் நாட்டி கட்டிட பணிகளை துவக்கி வைத்தார்.
நெல்லை மாநகர துணை ஆணையாளர் (மேற்கு)சுரேஷ்குமார் நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையாளர் நாக சங்கர் ஆயுதப்படை உதவி ஆணையாளர் முத்தரசு நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் பிறைச்சந்திரன் மற்றும் காவலர் ஆயுதப்படை அலுவலகர்கள் உள்பட கட்டிட பணிகள் ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

