தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர்கேம்பிள் தமிழக அரசு சார்பில் முல்லைப் பெரியார் அணையை கட்டிய ஆங்கிலப் பொறியாளர் கர்னல் ஜான் பென்னி குயிக்கின் அவர்களின் 181வது பிறந் நாள் விழாவை முன்னிட்டு பென்னி குயிக் அவர்களின் நினைவு மணிமண்டபத்தில் உள்ள பென்னி குயிக் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையிலும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் திமுக தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ் செல்வன் ஆண்டிபட்டி சட்ட மன்ற உறுப்பினர் மகாராஜன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலையில் பென்னிக் அவர்களின் திருவருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.
மேலும் இவ்விழாவில் மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவுலர் சண்முகசுந்தரம், வைகை பெரியார் பாசன திட்ட செயற்பொறியாளர் அன்பு செல்வன்,முல்லை பெரியார் அணையின் பொறியாளர் ஜாம், கப்பம் நீர்ப்பாசனதுறை உதவி பொறியாளர் பிரேம்குமார் கூடலூர் திமுக நகர கழக செயலாளர் லோகன் துரை மற்றும் உத்தமபாளையம் வட்டாச்சியர் அர்ச்சுணன் உட்பட திமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
மாவட்ட செய்தியாளர்
S விஜய லிங்கராஜா
.

