வேதாரணியம் நகராட்சி பகுதியில் 5 ஆயிரம் மஞ்சப்பை வழங்கல் – திமுக நாகை மாவட்ட செயலாளர் கௌதமன் தொடங்கி வைத்தார்.
வேதாரணியம்
ஜன 11
பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தி மீண்டும் மஞ்சப்பை என்ற முழக்கத்தோடு அனைவரும் மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் அவர்கள் மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் இன்று வேதாரணியம் நகராட்சியில் திமுக நகர செயலாளர் மா.மீ. புகழேந்தி 5 ஆயிரம் மஞ்சள் பைகளை வேதாரணியம் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு வீதி, மேல வீதி என நகரம் முழுவதும் மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் அனைவருக்கும் வழங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். கே .வேதரத்தினம் பொதுக்குழு உறுப்பினர் மறைமலை, தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் மகா குமார், வேதாரணியம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் உதயம் முருகையன் ,மா.மீ.அன்பரசு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .


செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

