வேதாரணியம் டிச 31
இன்று 2022ம் ஆங்கில புத்தாண்டை வரவேற்க்கும் வகையில் வேதாரண்யம் ஓய்வூதியர் கட்டடத்தில் இன்று ,மாலை 5:30 மணி முதல் 7:00 மணிவரை வேதாரணியம் லயன்ஸ் சங்கத்தின் சார்பாகவும் மற்றும் தீபம் சமுக நல அறக்கட்டளையும் இனைந்து 30க்கும் மேற்பட்ட ஏழை உறவுகள் அற்ற சின்னம் சிறார்களுக்கு புதிய உடைகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் வேதாரணியம் லயன்ஸ் சங்கத்தின் தலைவர் ரவிச்சந்திரன், செயலர் பாஸ்கரன், பொருளாளர் எழிலரசன், முன்னாள் ஆளுநர் S.வேதநாயகம்
முன்னாள் மண்டல தலைவர் S.S.தென்னரசு, முன்னாள் தலைவர்கள்
S.செல்வராஜ், சந்திரசேகர் லாய் ரெங்கசாமி மற்றும் தீபம் அறக்கட்டளை யின் உறுப்பினர்களும் வேதாரணியம் லயன்ஸ் சங்க உறுப்பினர்களும் கலந்துகொன்டனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

