விளாத்திகுளம் உட்கோட்டம் குளத்தூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வீடு புகுந்து தங்க நகை திருடிய பெண் கைது. ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள 10 பவுன் தங்க நகைகள் மீட்பு
???? குளத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பூசனூர் பகுதியைச் சேர்ந்த மாடசாமி மற்றும் அவரது மனைவி குருலட்சுமி ஆகிய இருவரும் கடந்த 18.12.21 அன்று வீட்டை பூட்டி விட்டு வேலைக்காக சென்று திரும்பி வந்து பீரோவை திறந்து பார்க்கும்போது பீரோவின் உள்ளறை உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள 9 (3/4) பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து குருலட்சுமி அளித்த புகாரின் பேரில் குளத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
???? இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் உத்தரவின்படி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து சம்பந்தப்பட்ட குற்றவாளியை தேடி வந்த நிலையில் அதே பூசனூர் பகுதியை சேர்ந்த மாரீஸ்வரன் என்பவரது மனைவி முருகேஸ்வரி (24) என்பவர் நகைகளை திருடியது தெரியவந்தது.
???? மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் குருலட்சுமி மற்றும் அவரது கணவர் வேலைக்குச் செல்லும்போது வீட்டைப் பூட்டிவிட்டு சாவியை வைத்து இருக்கும் இடத்தை அறிந்து வைத்துள்ளதும், வழக்கம்போல் கடந்த 18.12.2021 குரு லட்சுமி வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றிருந்த போது வீட்டை சாவியால் திறந்து வீட்டிற்குள் நுழைந்து பீரோவை திறந்து பீரோவின் உள் அறையை உடைத்து அதில் இருந்த தங்க நகைகளை திருடியது விசாரணையில் தெரியவந்தது.
???? இதனை அடுத்து போலீசாரின் தீவிர விசாரணையில் எதிரி மாரிஸ்வரியை கைது செய்து அவரிடமிருந்த ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள 9 (3/4) பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
???? விரைந்து செயல்பட்டு எதிரியை கைது செய்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்களை விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.


