நெல்லையில் பள்ளிகளில் தீவிர கண்காணிப்பு மாணவர்கள் ஆசிரியர்கள் நல்லுறவு அவசியம்
மாநகர காவல் ஆணையாளர் செந்தாமரைக்கண்ணன் பேச்சு
நெல்லை டவுன் சாப்டர் பள்ளியில் கழிவறை கட்டிடம் இடிந்து 3 மாணவர்கள் பலியானதை தொடர்ந்து போலீசார் பள்ளியில் மாணவர்கள் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது
கூட்டத்திற்கு நெல்லை காவல் மாநகர ஆணையாளர் செந்தாமரைக் கண்ணன் பேசியதாவது பள்ளி பள்ளி நிர்வாகம் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி வளாகத்திற்குள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் பள்ளிக்கட்டிடங்களில் பாதுகாப்புத் தன்மை மாணவர்களின் பாதுகாப்பு சுய ஒழுங்கு வாகன போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க செய்ய வேண்டும் இதற்கு பள்ளிகளில் ஆசிரியர்கள் தலைமை குழுக்கள் அமைத்து பள்ளி இடைவேளை பள்ளிக்கு வரும்போது வீட்டுக்கு திரும்பிச் செல்லும் பொழுது மாணவர்களை கண்காணிக்க வேண்டும் மாணவர்களிடையே முஸ்லிம் வகுப்புகளை நடத்த வேண்டும் மாணவர்களின் சுய ஒழுக்கத்தை வளர்ப்பது ஆசிரியர்கள் மாணவர்கள் இடையிலான நல்லுறவை பலப்படுத்த வேண்டியது மிக அவசியம் இதனிடையே பள்ளிகளில் ஏதாவது பதற்றம் சூழ்ல் ஏற்பட்டால் அதை சரியான முறையில் ஆசிரியர்கள் கையாண்டு பதற்றத்தை தணிக்க வேண்டும் பள்ளி கல்லூரி மாணவர்களின் உடல் நலம் மற்றும் மன நலனுக்கு தீங்கு ஏற்படுத்தும் கஞ்சா புகையிலை உள்ளிட்ட தடைபட்ட போதைப் பொருட்கள் பள்ளி கல்லூரிகளில் அழிக்கப்படுவதை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் இது குறித்து தகவல் உடனடியாக காவல்துறைக்கு தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் மாநகர காவல் ஆணையாளர் தெரிவித்தார்.

கூட்டத்தில் மாநகர காவல் ஆணையாளர் செந்தாமரைக்கண்ணன் மேலும் பேசுகையில் ஒவ்வொரு பள்ளிகளிலும் புகார் பெட்டி வைத்து அதில் வருகின்ற புகார்களுக்கு பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் மாணவர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும் அடையாள அட்டை அணிவது கட்டாயம் ஆக்கவேண்டும் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் பாலியல் ரீதியிலான புகார்கள் வந்தால் உடனடியாக பள்ளி நிர்வாகத்தினர் கல்வி அலுவலர் மற்றும் காவல்துறையிடம் தெரியப்படுத்த வேண்டும் ஜாதி மத ரீதியிலான பிரச்சனைகளில் ஈடுபடும் மாணவர்கள் ஒரு பள்ளியில் இருந்து வெளியேறிய பிறகு மற்றொரு பள்ளியில் சேர்ந்து அங்கு இது போன்ற பிரச்சினைகளில் ஈடுபட்டனர் இதுபோன்ற பிரச்சினைகளில் ஈடுபடும் மாணவர்கள் குறித்து பட்டியலை நாங்கள் தயார் செய்து வருகிறோம் நாங்கள் உங்களுக்கு உதவி செய்ய காத்திருக்கிறோம் மாணவர்கள் ஆசிரியர்களை அச்சுறுத்தினார் அதை குறித்து எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் என்றார்.
கூட்டத்திற்கு மாநகர காவல் துணை ஆணையாளர்கள் கிழக்குப் பகுதி சுரேஷ்குமார் மேற்கு பகுதி சுரேஷ்குமார் மாவட்ட கல்வி அலுவலர்கள் நெல்லை வசந்தா சேரன்மகாதேவி ரெஜினி முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் டைட்டஸ் திட்ட அலுவலர் (சமக்ரஷிகஷா ) சிவராஜ் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கணேசன் அரசு அரசு உதவிபெறும் பள்ளி தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர் முன்னதாக விபத்தில் பலியான 3 மாணவர்களுக்கு அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

