மாண்புமிகு முதலமைச்சரின் ஊட்டச்சத்து தழைகள் வழங்கும் திட்ட துவக்கவிழா
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் மாண்புமிகு முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்து தளைகள் வழங்கும் திட்ட துவக்க விழா மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சி கலந்து கொண்ட மாவட்டஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி அன்றாட தேவைக்கான நஞ்சில்லா காய்கறிகளை மகளிர் தங்களது இல்லங்களிலே உற்பத்தி செய்வதற்கு ஊரகப் பகுதிகளில் ரூ.60 மதிப்புள்ள 12 வகை காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு 75 சதவீத மானியத்தில் ரூ.15க்கும், நகர்புறங்களில் ரூ.900 மதிப்புள்ள 6 வகை காய்கறி விதைகள் அடங்கிய மாடி தோட்ட தொகுப்பு 75சதவீத மானியத்தில் ரூ.225க்கும், மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஊட்டச்சத்தை மேம்படுத்தவும், கண் பார்வைக்கு பப்பாளி, நோய் எதிர்ப்புசக்திக்கு எலுமிச்சை, இரும்பு சத்துக்கு முருங்கையும், கறிவேப்பிலையும், மற்றும் கற்பூரவல்லி, திப்பிலி, கற்றாழை, புதினா போன்ற மருத்துவ குணம் கொண்ட மூலிகை செடி அடங்கிய ரூ.100 மதிப்புள்ள 75சதவீத மானியத்தில் ரூ.25க்கும் தமிழ்நாடு முழுவதும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் இன்றுது வக்கிவைக்கப் பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து நம் மாவட்டத்தில் வீட்டு காய்கறி தோட்டதளைகள், மாடித்தோட்டதளைகள் மற்றும் ஊட்டச்சத்து தோட்டத்தளைகள் அடங்கிய தொகுப்பினை 25 பயனாளிகளுக்கு வழங்கி துவக்கி வைக்கப்பட்டது. மேலும் பயன்பெற விரும்பும் பயனாளிகள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகிடுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டவருவாய் அலுவலர் ஷகிலா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால், தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் திவ்யா, ஜெயலெட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
வேதாரண்யம்.

