மத்திய பாஜக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து. தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில் பாஜக ஒருபோதும் ஆட்சி அமைக்க முடியாது ஏபிசி சண்முகம் பேச்சு:
மத்திய பாஜக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்தும், ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளால் மக்களின் பாதிப்பை உணர்த்துகிற வகையில் தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி அன்னை சோனியாகாந்தி அவர்கள் அறிவித்த படி, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் வேண்டுகோளின் படி தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாநில செயலாளர் பால்ராஜ், தமிழக காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் A.P.C.V.சண்முகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேனியல்ராஜ் ஆகியோர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஏபிசி சண்முகம் பேசியதாவது
விலைவாசி உயர்வை கட்டவிழ்த்துவிட்டு மக்களை வாட்டி வதைக்கும் பாஜக வினர் காங்கிரசை பார்த்து வாரிசு அரசியல் என்று பேசுகிறது. நாட்டிற்காக பல தியாகங்களை செய்த குடும்பம் அன்னை சோனியா காந்தி குடும்பம் அன்னை சோனியா காந்தி நினைத்திருந்தால் ராகுல் காந்தியை பிரதமராக நியமித்து இருப்பார் பொருளாதார நிபுணர் இந்தியாவின் வளர்ச்சிக்கு தேவையான டாக்டர் மன்மோகன் சிங் அவர்களை பிரதமராக நியமித்து இந்தியாவின் பொருளாதாரத்தை நிலைநாட்டியவர் அன்னை சோனியா என்று பேசிய அவர் கிழக்கே உதிக்கும் சூரியன் ஒருவேளை மேற்கே உதித்தாலும் கூட தமிழகத்தில் பாஜக ஒரு காலமும் காலூன்ற முடியாது என ஆணித்தரமாக பேசினார் அவரின் அனல் பறக்கும் பேச்சால் காங்கிரசார் உற்சாகம் அடைந்தார்கள்
இந்த
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள். முன்னாள் மாவட்ட தலைவர் A.T.S.அருள்,
மண்டல தலைவர்கள் ஐசக்சில்வா, சேகர், பிரபாகரன், செந்தூர்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் SC/STபிரிவு மாவட்ட தலைவர் ராஜாராம், மகிளா காங்கிரஸ் தலைவி தனலெட்சுமி, ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்க தலைவர் ராஜ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் நடேஷ்குமார், விவசாய பிரிவு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மைதீன், மாவட்ட சேவாதளம் தலைவர் ராஜா, முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் சந்திரபோஸ், கந்தசாமி, ராதாகிருஷ்ணன், கோபால், மாவட்ட துணை தலைவர்கள் பிரபாகர், அருணாசலம், மாவட்ட செயலாளர்கள் முனியசாமி, அந்தோணி குரூஸ், ராஜா, சேவியர் மிஷியர், வார்டு தலைவர்கள் மகாலிங்கம், சந்திரன், தனுஷ், ரொனால்டு, சூசையாவியாகுலம், ஜோபாய்பச்சேக், ஜான்சன், பாலகிருஷ்ணன், மீராசா, சித்திரைபால்ராஜ், ஜான் சாமுவேல் தர்மராஜ், மைக்கேல், இந்திரா, சாந்தி, செந்தூர்செல்வம், உள்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
