தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கனிமொழி எம்பி பார்வையிட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட – ஆத்தூர், நகக்கன்னியாபுரம் மற்றும் தண்ணீர்ப்பந்தல் பகுதிகளை கனிமொழி எம்பி பார்வையிட்டார். பின்பு மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.


