கோடியக்கரை வன உயிரின சரணாலயம் முகப்பில் வன உணவகம் திறப்பு .
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலய நுழைவுவாயிலில் சுற்றுலா பயணிகளின் நலனை கருதி வனத்துறையின் ஐந்து சூழல் மேம்பாட்டு குழுக்களை கொண்டு சைவம் மற்றும் அசைவம் உணவுகள் மற்றும் ஆண் , பெண் கழிப்பிட வசதிகளை கொண்ட உயர்தர வன உணவகத்தை நாகை மாவட்ட வன உயிரின காப்பாளர் யோகேஸ்குமார் மீனா திறந்து வைத்தார்.

இத்திறப்பு விழாவில் நாகப்பட்டினம் வனச்சரக அலுவலர் டேனியல் , கோடியக்கரை ஊராட்சி மன்ற தலைவர் S.P.சுப்பிரமணியன் , துணைத் தலைவர் D.குமார் , கோடியக்காடு ஊராட்சி மன்ற துணை தலைவர் T.சரவணன் மற்றும் வனத்துறை வனவர்கள் சதீஷ் , ரதி பாரதி , நித்திய ஜீவா , ராமதாஸ் மற்றும் சூழல் மேம்பாட்டு குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழா நிகழ்ச்சிகளை கோடியக்கரை வனச்சரக அலுவலர் பா.அயூப் கான் செய்திருந்தார்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

