காலை தீபம் நாளிதழ் செய்தி எதிரொலி !! பல ஆண்டுகளாக போடாமல் இருந்த
கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயில் ரோடு அமைக்கும் பணி தீவிரம்!!
திண்டுக்கல் மாவட்டத்தில் சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் குறிஞ்சி ஆண்டவர் ரோடு போக்குவரத்திற்கு லாயக்கற்ற ரோடாக பல ஆண்டுகளாக இருந்து வந்தது கொடைக்கானலில் இயற்கை அழகை ரசித்து விட்டு சுற்றுலா பயணிகள் கடைசியாக குறிஞ்சி ஆண்டவர் கோயிலுக்கு செல்லும் பொழுது நொந்து போகும் அளவிற்கு சாலைகள் இருந்தது இதுகுறித்து அப்பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்து வந்தநிலையில் குறிஞ்சி ஆண்டவர் சாலை பணி கிடப்பில் கிடந்தது.
இதுகுறித்து பப்ளிக் ரிப்போர்ட்டர் புலனாய்வு இதழ் மற்றும் காலை தீபம் நாளிதழில் குறிஞ்சி ஆண்டவர் கோவில் சாலை சீரமைக்க வலியுறுத்தி செய்திகள் வெளியிடப்பட்டது தமது செய்தியின் எதிரொலியாக பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கொடைக்கானல் நகராட்சி ஆணையர் நாராயணன் ஆகியோர் தனி கவனம் செலுத்தி குறிஞ்சி ஆண்டவர் சாலையை அமைக்கும் பணியை துரிதப்படுத்தினர் பல ஆண்டுகளாக கேட்பாரற்று கிடந்த இந்த சாலை புதிய அரசு அமைந்து 150 தினங்கள் கூட ஆகாத நிலையில் கொடைக்கானல் பகுதியில் மக்கள் பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெறுகிறது கொடைக்கானல் திமுக நகர செயலாளர் இப்ராஹிம் கொடைக்கானல் பகுதியில் மக்கள் பிரச்சினையை அனைத்தும் அமைச்சரவை பெரியசாமி பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் கவனத்திற்கு உடனுக்குடன் எடுத்து சென்று வருகிறார் இதன் மூலம் கொடைக்கானலில் பல்வேறு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது உதாரணத்திற்கு குறிஞ்சி ஆண்டவர் கோவில் சாலை சுமார் 25 ஆண்டுகளாக போடாத நிலையில் தற்போது பல லட்சம் மதிப்பில் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயில் பில்டிங் சொசைட்டி இணைக்கும் சாலையில் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பாக எஸ்.அண்ணாதுரை கூறிக்கொள்ளும் நன்றி அறிக்கை. என்னவென்றால் பல காலமாக எங்கள் பகுதியில் சாலை போக்குவரத்து மிகவும் மோசமடைந்து இருந்தது அதை பலமுறை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று போராடி பல வகையிலும் போராட்டத்திலும் கிடைக்காத சூழலில் இன்று ரோடு பணி துவக்கப்பட்டுள்ளது
பழனி சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ திரு ஐ பி செந்தில்குமார் அவர்களின் உத்தரவின் பெயரில் நடைபெறுகின்ற இந்த பணி கொடைக்கானல் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது என்று கூறினார் பழனி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ திரு ஐ பி செந்தில்குமார் அவர்களுக்கு குறிஞ்சி ஆண்டவர் கோயில் பில்டிங் சொசைட்டி பொது மக்களின் சார்பாக நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார் இந்தப் பகுதியில் சாலை படு மோசமாக இருந்து வந்த நிலையில் இதுகுறித்து அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு செய்தியாக படத்துடன் சுட்டிக்காட்டிய காலை தீபம் நாளிதழ் குழுமத்திற்கும் பப்ளிக் ரிப்போர்ட்டர் புலனாய்வு இதழ் குழுமத்திற்கும் கொடைக்கானல் மக்களால் பாராட்டுகள் குவிகிறது மேலும் இந்த சாலை அமைப்பதற்கு பெரும் உதவியாக செயல்பட்ட சட்டமன்ற உறுப்பினர் நகராட்சி ஆணையர் திமுக நகர செயலாளர் போன்றவர்களுக்கு குறிஞ்சி ஆண்டவர் கோவில் சாலையில் உள்ள பொதுமக்கள் சார்பில் பாராட்டு விழா இந்த சாலை பணிகள் முடிந்தவுடன் வைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
செய்தி தொகுப்பு: கொடைக்கானல் வி ஆனந்த்

