நெல்லை மாவட்டம் வள்ளியூர், சங்கனாபுரத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த வாக்குச் சாவடிக்கு 88வயதுள்ள சங்கரம்மாள் என்பவர் வாக்களிக்க சென்றார். அப்போது தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த உதவி ஆய்வாளர் சையத் நிஸார், தள்ளாத வயதிலும் வாக்குச் செலுத்த நடந்து வருவதை பார்த்து, பாட்டியை தனது கைகளால் தூக்கி சென்று வாக்களிக்கச் செய்தார்.
வாக்குச் சாவடியில் 88வயது சங்கரம்மாள் பாட்டியின் ஜனநாயக கடமையை நிறைவேற்ற உதவிய உதவி ஆய்வாளர் சையத் நிஸாருக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர் .

